×

கோவில் பணியாளர்களுக்கு அடிச்சது ‘ஜாக்பாட்’: அகவிலைப்படி மேலும் 4% உயர்வு.. தமிழக அரசு கொடுத்த தீபாவளி பரிசு!!

சென்னை : அரசு ஊழியர்களை போல திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 42% உள்ள அகவிலைப்படி 46% ஆக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் அறிவித்தார். ஜூலை 1-ம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்தது. இதனிடையே ஒரு லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் ஆண்டு வருமானம் பெறக்கூடிய திருக்கோவில்களில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்களுக்கு கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் அகவிலைப்படி 42% ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. அதனை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும் என பணியாளர்கள் சார்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இந்த நிலையில், பணியாளர்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த ஏப்ரல் 1ம் தேதி 42% ஆக உயர்த்தப்பட்ட அகவிலைப்படி தற்போது 46% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் ஆண்டு வருமானம் பெறக்கூடிய திருக்கோவில்களில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்களுக்கு ஜூலை 1ம் தேதி முதல் கணக்கிட்டு 46% அகவிலைப்படி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பகுதிநேர, தினக்கூலி, தொகுப்பூதிய மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களுக்கு இந்த அகவிலைப்படி உயர்வு பொருந்தாது எனவும் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசின் அறிவிப்பை முறையாக பின்பற்றுவதை உறுதி செய்யவும் அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post கோவில் பணியாளர்களுக்கு அடிச்சது ‘ஜாக்பாட்’: அகவிலைப்படி மேலும் 4% உயர்வு.. தமிழக அரசு கொடுத்த தீபாவளி பரிசு!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Chennai ,Tamil Nadu Govt ,Diwali ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...